குடிவரவு குடியகழ்வு வட பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்படும் - ஜனாதிபதி அறிவிப்பு

குடிவரவு குடியகழ்வு வட பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்படும் - ஜனாதிபதி அறிவிப்பு
  • :

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் குடிவரவு குடியகழ்வு வட பிராந்திய (கடவுச்சீட்டு) அலுவலகம் விரைவில் அமைக்கப்படும் எனவும், அதற்கான இடவசதி ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்க அதிபர் அவர்களுக்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நேற்று (31.01.2025) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கினார்.

மேலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிபர் சகிதம் மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்படவுள்ள அலுவலகத்தின் இடவசதியினை நேரடியாக ஆராய்ந்தார்.

Related Articles