மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை

மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு  சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை
  • :

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்கள் ஒழுங்குமுறை சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து  கொண்ட போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ராஜகிரிய ஆயுர்வேத தேசிய மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்கள் ஒழுங்குமுறைக் குழு தலைவர் உட்பட 17 உறுப்பினர்களைக் உள்ளடக்கி உள்ளது.

 

உள்ளூர் மருந்து தொழிற்சாலைகள் உள்ளூர் மருந்து உற்பத்தி உள்ளூர் மருந்து கடைகள் உள்ளூர் மருத்துவ உபகரணங்கள் உள்ளூர் மருத்துவ மற்றும் அழகுசாதன உற்பத்தி உள்ளூர் ஆயுர்வேத மருந்துகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உள்ளூர் மருந்துகளின் சேமிப்பு மற்றும் போக்குவரத்து மற்றும் மூலிகைகள் சாகுபடி  ஆகியவற்றை இந்த நிறுவனம் ஒழுங்குபடுத்துகிறது.

 

மேலும் ஆயுர்வேத மருந்துகளுக்கான தொழில்நுட்பக் குழு ஆயுர்வேத தொழிற்சாலையின் சேமிப்பு மதிப்பீட்டுக் குழு மற்றும் சந்தை ஆய்வுக் குழு மருத்துவ  மூலிகைகள் மதிப்பீடு செய்வதற்கான அலுவலர்கள் குழு ஆகிய நான்கு குழுக்களும் ஆயுர்வேத மருந்துக் குழுவின் முழு மேற்பார்வையில் செயல்படுகின்றன. 

 

இதன்போது அமைச்சர் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஆயுர்வேத துறையின் ஒழுங்குமுறை பொறுப்பிலிருந்து விலகியிருக்கும் போது தரமான மற்றும்  உயர்தர பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை தற்போது அது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் உட்பொருட்களை ஒழுங்குபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் புதிய உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் உரையாடினார்.

 

உள்ளூர் மருத்துவ முறையை நன்கு மேம்படுத்தி எதிர்கால இலக்குகளில் அந்த மருத்துவ முறை தொடர்பான தனித்தன்மைகளை அடையாளம் கண்டு அந்தத்  தனித்தன்மைகளை சுற்றுலா வணிகத்துடன் இணைத்து சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்று  அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை அமைப்புகளை ஒன்றிணைக்கும் போது சுற்றுலாப் பகுதிகளில் மனித மற்றும் பௌதீக வசதிகளை  துரிதமாக அபிவிருத்தி செய்யுமாறு அரசாங்கம் கோருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் கலாநிதி தம்மிக்க அபேவிக்ரஸம மற்றும் ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்கள் ஒழுங்குமுறை சபையின் புதிதாக  நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள் அதிகாரிகள் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]