மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத் தொகுதியின் முதல் கட்ட நிருமாணத்திற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் அண்மையில் (04) இடம்பெற்றது.
சப்ரகமுவ மாகாணத்தின் 142 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிருமாணிக்கப்படும் இந்த வைத்தியசாலை விடுதிக் கட்டிடத் தொகுதி முதல் கட்டம் 2026 நவம்பர் மாதத்தில் முடிவுறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் ஹேரத், சப்ரகமுவ மாகாண சபையின் பிரதம அமைச்சின் செயலாளர், மாவனல்லை வைத்திய சாலைப் பணியாளர், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர், உட்பட வைத்தியசாலைப் பணியாளர்கள், மாவனல்லை, அரநாயக்க பிரதேச மக்கள் உட்பட பெருந்திரளானவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கேகாலை மாவட்ட ஊடகப்பிரிவு


