முசலி மற்றும் நானாட்டான் கடல் பகுதிகளில் உள்ள பவளப் பாறைகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகப் பிரகடனப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

முசலி மற்றும் நானாட்டான் கடல் பகுதிகளில் உள்ள பவளப் பாறைகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகப் பிரகடனப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
  • :
மன்னார் மாவட்டத்தின் முசலி மற்றும் நானாட்டான் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட கடல் பகுதிகளில் காணப்படும் பவளப் பாறைகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகப் பிரகடனப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், நேற்று (12) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

 இக் கலந்துரையாடலில் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர், IUCN நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர், SLRC நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் உள்ளிட்ட தொடர்புடைய திணைக்களங்களின் உதவி பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles