நீர்த்தேக்கங்களில் போதுமான அளவிற்கு நீர் காணப்படுகிறது - நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம்

நீர்த்தேக்கங்களில் போதுமான அளவிற்கு நீர் காணப்படுகிறது - நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம்
  • :

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பொறியியளாலர் கலாநிதி கித்சிரி வெலிகேபாலகே, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் சுமார் 50 சதவீதம் நீர் சேகரிக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது சிறு போகம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் நீர் சேகரிப்பு நிறைவடையும் என்றும், நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு ஓரளவிற்குக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

நேற்று (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அதன்படி, வரவிருக்கும் பெரும் போகம் அக்டோபர் மாத முதல் பகுதியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், நீர்த்தேக்கங்களில் தற்போதைய நீர் மட்டத்தைப் பராமரித்துக்கொண்டே அடுத்த பருவத்திற்கு விரைவாகச் செல்ல வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

 

 மேலும், நவம்பர் மாதத்தில் அதிக மழை பெய்தால், தற்போது விவசாயம் செய்யப்படும் நெல் வயல்கள் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பயிர்களைத் தாங்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

கிழக்கு மாகாணத்தில் உள்ள நீர்த்தேக்கங்களைத் தவிர, குடிநீர் பெறப்படும் மற்ற நீர்த்தேக்கங்களிலும் போதுமான நீர் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles