ஓமானில் கைது செய்யப்பட்ட, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் அங்கத்தவரான பிரபாத் மதுசங்க என்ற “மிதிகம சுட்டி”, சில மணிநேரத்திற்கு முன்பு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்.
பல குற்றங்களுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஓமான் பாதுகாப்புப் படைகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, குற்றப் புலனாய்வுத் துறையைச் (CID) சேர்ந்த மூன்று அதிகாரிகள் நேற்று (28) ஓமானுக்குப் புறப்பட்டனர்.
சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இந்த நபர், மத்திய கிழக்கிலிருந்து செயல்பட்டு பல போதைப்பொருள் கடத்தல், கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறார்.
மேலும், "ஹரக் கட்டா" என அறியப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரை 2023-ஆம் ஆண்டில் மடகாஸ்கரிலிருந்து நாட்டிற்குக் கொண்டு வந்ததன் பின்னர் நடவடிக்கையிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பில் இருந்து தப்பிப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்ததிலும் "மிதிகம சுட்டி"யும் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது
இந்தத் திட்டத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு முக்கிய நபரும், ஹரக் கட்டாவின் நெருங்கிய நண்பரும் உறவினருமான “மிதிகம ருவான்”, கடந்த ஆண்டு துபாயில் கைது செய்யப்பட்டு, இராஜதந்திர செயற்பாடு மூலம் 2023 மே மாதம் நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டார்.
மேலும், மிதிகம ருவான் கைது செய்யப்பட்ட பிறகு, போதைப்பொருள் கும்பலின் செயல்பாடுகளை “மிதிகம சுட்டி” இயக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


