பெல்வெஹெரவில் உள்ள அரச விதைப் பண்ணையை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த அண்மையில் மேற்பார்வை செய்தார்.
விவசாய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் உணவுப் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும், இதற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையான பொருளாதார ஜனநாயகத்தை நிறுவுவதன் மூலம் விவசாயி முதல் நுகர்வோர் வரை அவரது நியாயமான பங்கை வழங்க அரசாங்கம் தலையிட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.