எமது நாட்டில் பயணிகள் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய போக்குவரத்து ஊடகமாக பேருந்துப் போக்குவரத்து அமைவதுடன், குறித்த சேவைகளை இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் சுயாதீன தனியார் பேருந்து பணிப்பாளர் அதிகளவில் இயங்குகின்றனர்.
பயணிகளுக்கான பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் போது நீண்டகாலமாக இயங்கி வருகின்ற முறைமையால் அதிக போட்டித்தன்மை, திட்டவட்டமான நேர அட்டவணையை கடைப்பிடிப்பதிலுள்ள பலவீனம், வீதிகளில் அதிக பேரூந்துகள் இயங்குகின்றமை, பேரூந்துகளை இயக்குவதில் பாதுகாப்பற்ற நடத்தைகள், பயணிகள் எதிர்கொள்கின்ற சிரமங்கள், மோட்டார் வாகன நெரிசல், சேவையில் காணப்படுகின்ற சமநிலையற்றதன்மை மற்றும் வளங்களை வினைத்திறனற்ற வகையில் பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகள் பல மேலெழுந்துள்ளன.
அவ்வாறான பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வுகளாக உலகில் பல நாடுகள் பேரூந்து தொழிற்றுறையில் கொத்தணி (Bus Sector Clustering) முறைமையை அறிமுகப்படுத்தி ஒரே பயணிகள் போக்குவரத்து வழித்தடமாகவோ அல்லது குறித்த பூகோளப் பிரதேசத்தில் இயங்குகின்ற பேரூந்து சேவைகளை ஒருங்கிணைந்த முகாமைத்துவத்தின் கீழ் இயக்குவதாகும். ஒன்றுக்கொன்று தொடர்புபடுகின்ற வீதிகளில் பயணிக்கின்ற பேருந்துச் சேவைகள் தனித்தனி அலகுகளாக அல்லாமல், ஒருங்கிணைந்த சேவைக் கொத்தணியாக முகாமைத்துவம் செய்கின்ற முறைமையாக அமையும் பேரூந்துச் சேவைகளை கொத்தணியாக்கல் முறைமையை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவது பயனுள்ள பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதற்கும், சமகால பேருந்துச் சேவையில் காணப்படும் பெரும்பாலான இயக்கங்கள் மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளை குறைத்துக் கொள்வதற்கு இயலுமை கிட்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, முதலாவதாக, பேரூந்து சேவை இலக்கங்கள் 170, 177 மற்றும் 190 ஆகிய பேரூந்து வழித்தடங்களில் சேவை கொத்தணியாக்கல் முன்னோடி வேலைத்திட்டத்திற்குரிய பங்காளர்களின் பங்கெடுப்புடன் அமுல்படுத்துவதற்கும், அதன் முன்னேற்றத்தின் அடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.


