அதற்கமைய, 2026 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதம் முதல் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வருகின்ற போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலையில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்ற தளம்பல்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பேரூந்து இயக்கச் செலவுகள், தற்போது பயன்படுத்தப்படும் பேரூந்து உதிரிப்பாகங்கள், அமெரிக்க டொலரில் ஏற்பட்டுள்ள தளம்பல்களால் பேரூந்து உதிரிப் பாகங்களின் விலைகளில் ஏற்படும் தாக்கங்கள், அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்குகின்ற பேரூந்துகள் மற்றும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தாழ்மிதிபலகை கொண்ட லங்கா மெட்றோ ரான்ஸ்சிற் பிறைவெட் லிமிட்டட் இன் கீழ் இயங்குகின்ற பேருந்துகள் போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு தொடர்ச்சியான சேவைகளை வழங்குவதற்காகவும் மற்றும் பேரூந்து தொழிற்றுறையைப் பாதுகாப்பதையும் கருத்தில் கொண்டு, தற்போது காணப்படுகின்ற பேரூந்துக் கட்டண சூத்திரம் (செலவுச் சுட்டி) மற்றும் கட்டணக் கட்டமைப்பை இற்றைப்படுத்தல், திருத்தம் செய்வதற்கான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


