பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்கலேட் விலைகளை மே மாதம் வரை அதிகரிப்பதில்லையென உற்பத்தி உரிமையாளர்கள் உத்தரவாதம் - வர்த்தகம், வாணிபத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்கலேட் உட்பட இனிப்பு பண்ட உற்பத்திகளின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிப்பதில்லையென இலங்கை இனிப்பு பண்ட உற்பத்தி உரிமையாளர்கள் சங்கம் வர்த்தகம் வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசங்க தலைமையில் நடைபெற்றது.
சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று (26) அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பாக அமைச்சர் குறிப்பிட்டார் .
மத்திய கிழக்கு வலயத்தில் இந்த யுத்த காலத்தில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக பிஸ்கட் உட்பட இனிப்பு பண்ட உற்பத்திகள் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் முகாமைத்துவத்திற்கு அந்தத் துறை சார்ந்தவர்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் பாவனையாளர்களுக்கு செல்வாக்கு செலுத்தும் விதம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வர்த்தக அமைச்சினால் இவ் ஒன்று கூடல் மேற்கொள்ளப்பட்டது
நுகர்வு பொருட்களின் மிக விலை அதிகரித்தல் இந்த சந்தர்ப்பத்தில் நுகர்வோருக்கு தாங்கிக் கொள்ள முடியாது என்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
உலகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக காணப்படும் பாதிப்பினால் நாட்டில் பிஸ்கட் தொழிலில் தொடர்ந்து உற்பத்தியாளர்களை தங்கி இருக்கச் செய்வது, பாவனையாளர்களின் அழுத்தத்தைக் குறைக்கச் செய்யும் என முகாமை செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
இவ்வாறான அசாதாரண சூழ்நிலையில் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிடுவதற்கு தயாராக இருப்பதாகவும், நிலையிலும் பாவனையாளர்கள் தொடர்பாக சிந்தித்து செயல்படுவதாக சுட்டிக்காட்டினார்.


