தேசிய கொள்கைச் சட்டகத்தின் "பாதுகாப்பான சிறுவர் உலகம் ஆக்கபூர்வமான எதிர்கால சந்ததி" இற்கான கொள்கை ரீதியான கடப்பாடுகளுக்கு அனைத்துவித இணக்கப்பாடுகளுக்கமைய பல்துறைசார் அணுகுமுறையுடன் கூடிய குறித்த ஐந்தாண்டு தேசிய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


