திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் அலுவலர்களுக்கான செயலமர்வு.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் அலுவலர்களுக்கான செயலமர்வானது இன்று (23) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள், கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ். கே. டி. நிரஞ்சன் அவர்களினால் கலந்துரையாடப்பட்டன.
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 24, 25, 28, மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.