நீர்கொழும்பு சுற்றுலா வலயத்தை மையமாகக் கொண்டு, நாட்டின் பாரம்பரிய கைவினைப் பொருட்களின் தயாரிப்புகளுக்கு சர்வதேச சந்தையைத் திறக்கும் நோக்கில், இலங்கை கைவினைப் பொருட்கள் சபையின் (லக்சல) 14வது விற்பனைக் கிளை இன்று (12) நீர்கொழும்பில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதன்போது அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, இடைத்தரகர்களின் பிடியின்றி உள்ளூர் கைவினைஞர்களின் தயாரிப்புகளுக்கு அதிகபட்ச மதிப்பை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் எனத் தெரிவித்தார்.


