வானிலை முன்னறிவிப்பு

வானிலை  முன்னறிவிப்பு
  • :

2025 பெப்ரவரி 2 ஆம் திகதிக்கான காலநிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 2 ஆம் திகதி காலை 5.30மணிக்கு வெளியிடப்பட்டது

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து (02ஆம் திகதி) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரத்தினபுரி, காலி மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் சில பிரதேசங்களில் முக்கியமாக மழையில்லாத வானிலை நிலவுகிறது. மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை ஏற்படக் கூடிய தற்காலிக காற்று மற்றும் மின்னல் அபாயங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]