கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் தேசிய வடிவமைப்பு மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உற்பத்திகள் ஊடாக வெளிநாட்டு சந்தையை கையகப்படுத்துவது தொடர் குறித்து உற்பத்தியாளர்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட நிகழ்வு அண்மையில் கடுபெத்தயில் அமைந்துள்ள தேசிய வடிவமைப்பு மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் சமகால வடிவமைப்பு ஆய்வுகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சிதுமின ரத்னமலலவினால் வளப் பங்களிப்பு வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் மரச் செதுக்குதல், பித்தளைச் உற்பத்தி, தேங்காய் சிரட்டை கைப்பணிகள், தோல் வேலைப்பாடுகள் மற்றும் பெத்திக் உற்பத்திகள் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள சுமார் ஐம்பது நிபுணத்துவ கைவினைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.