ஜனாதிபதி செயலகத்தின் தேசிய சிறுநீரக நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், திரப்பனை மகாகணுமுல்லைக்கு நீர் சுத்திகரிப்பு அமைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் தேசிய சிறுநீரக நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், திரப்பனை மகாகணுமுல்லைக்கு நீர் சுத்திகரிப்பு அமைப்பு
  • :

ஜனாதிபதி செயலகத்தின் “தேசிய சிறுநீரக நோய் தடுப்பு” திட்டத்தின் கீழ், திரப்பனை மகாகணுமுல்ல கிராம சேவக பிரிவில் புதிய நீர் சுத்திகரிப்பு அமைப்பு கடந்த 12ஆம் திகதி பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நீர் சுத்திகரிப்பு அமைப்பை இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப பிரிவு நிறுவியதுடன் அதன் பராமரிப்புப் பணிகளை மகாகணுமுல்ல பினிபிந்து சமூக நீர் குழாம் மேற்கொண்டுள்ளது.

Related Articles