வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பணியாளர்களின் பௌத்த சங்கம் ஏற்பாடு செய்யும் 'வெசாக் தர்ம சொற்பொழிவு' இம்முறையும் 2025.05.15 ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு குழு அறை 1 இல் இடம்பெற்றது.
வத்தளை வெளிகடமுல்ல அபய விகாராதிபதி, கொழும்பு அசோகா கல்லூரியின் தர்ம ஆசிரியர், சங்கைக்குரிய களனியே சாசனவங்ஷ தேரர் தர்ம சொற்பொழிவை நிகழ்த்தினார்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோர் உள்ளிட்ட பணியாளர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.