09 வது சீன - தெற்காசியக் கண்காட்சி ஆரம்பம்

09 வது சீன - தெற்காசியக் கண்காட்சி ஆரம்பம்
  • :

இம்முறை கண்காட்சியின் தொனிப்பொருள் நாடு இலங்கை
9 ஆவது சீன - தெற்காசிய கண்காட்சி இன்று (19) தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்ஹில் ஆரம்பமானது.

ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என்ற தொனிப்பொருளில் இம்முறை கண்காட்சி எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறும்.

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் பலர் இதற்காக இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இம்முறை கண்காட்சியின் தொனிப்பொருள் நாடு இலங்கையாகும்.
அதன்படி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 100 தொழில் முயற்சியாளர்கள் இதில் கலந்து கொள்கின்றமை மிக சிறப்பம்சமாகும்.

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள், சிலோன் டீ, பத்திக் உற்பத்தி, தென்னை தயாரிப்புகள் மற்றும் சரக்குப் பொருள் போன்றவை இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]