உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த துருக்கியக் கடற்படைக் கப்பலான ‘TCG BÜYÜKADA’, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாஹுவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியின் பிறகு 2025 ஜூன் 18 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் இந்தக் கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை முறைப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டு கடற்படைப் (PASSEX) பயிற்சியின் போது, கப்பல்களுக்கு இடையே அமைப்புகள் ரீதியாகப் பயணம் செய்தல் மற்றும் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளுதல் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் கப்பல்களுக்கு இடையேயான வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்களுக்குப் பிறகு கூட்டுப் பயிற்சி முடிவுக்கு வந்தது.
‘TCG BÜYÜKADA’ என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படையால் வெலிசர கடற்படை தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கைப்பந்து போட்டியிலும் தீவின் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களைப் பார்வையிடவும் கப்பல் பணியாளர்கள் பங்கேற்றனர். இலங்கை கடற்படை வீரர்களுக்கு கப்பலின் செயல்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது.