எதிர்வரும் கதிர்காம யாத்திரைக் காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காம புனித பூமிக்கு வருகை தரும் யாத்திரிகர்கள் பொலித்தீனைப் பயன்படுத்தாது யாத்திரையை மேற்கொள்ளுமாறு சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
கதிர்காம புனித பூமியை தரிசிப்பதற்கு இந்த வருடத்தில் பாத யாத்திரைக்காக 30,000 இற்கும் அதிகமான எண்ணிக்கையிலானவர்கள் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன் பாத யாத்திரை 2025.06.20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.