2024 சிறு போகத்திற்கான சம்பந்தப்பட்ட சகல விவசாய இழப்பீடுகளும் செலுத்தப்பட்டு நிறைவு- கமநல மற்றும் விவசாயக் காப்புறுதி சபை

2024 சிறு போகத்திற்கான சம்பந்தப்பட்ட சகல விவசாய இழப்பீடுகளும் செலுத்தப்பட்டு நிறைவு- கமநல மற்றும் விவசாயக் காப்புறுதி சபை
  • :

கடந்த 2024 சிறு போகத்துடன் சம்பந்தப்பட்ட சகல இழப்பீடுகளும் தற்போது செலுத்தப்பட்டு நிறைவடைந்துள்ளதாக கமநலக் மற்றும் விவசாயக் காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.

அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அச்சபை 2024/ 2025 பெரும் போகத்துடன் சம்பந்தப்பட்ட மேன்முறையீடு செய்யப்பட்ட காப்பருதி இழப்பீடு சிறிய அளவில் மீதப்பட்டுள்ளதுடன் அந்த விவசாய இழப்பீடு ஜூன் 30-ஆம் திகதி செலுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

அதற்கு மேல் அதிகமாக 2025 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை வெள்ளம், வரட்சி, காட்டுயானைகளால் பாதிப்பு போன்றவற்றுக்கு இம்மாதம் முடவதற்கு முன்னர் சகல இழப்பீடுகளையும் செலுத்துவதற்காக சபை நடவடிக்கை எடுத்துள்ளது

இதன்போது நெல், சோளம் பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய், போன்ற உற்பத்திகளுக்காக காப்புறுதி செய்யப்படாத, 05ஏக்கர்கள் வரை இலவசமாக காப்புறுதி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு ஹெக்டயருக்கு 100,000 ரூபாய் அதிகபட்சமாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட மழை காரணமாக பயிர் பாதிப்புகளுக்காக 53511 விவசாயிகளுக்கு 61071 ஏக்கர்களுக்கு 951 மில்லியன் ரூபாய் நிதி கமநல மற்றும் விவசாய காப்புறுதி சபையினால் செலுத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]