கந்தளாயில் செய்கை பண்ணப்படாத இடங்களில் பயிரிடுவதற்கான தேசிய திட்டம்

கந்தளாயில் செய்கை பண்ணப்படாத இடங்களில் பயிரிடுவதற்கான தேசிய திட்டம்
  • :

மிக நீண்ட காலமாக, பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படாது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த, கந்தளாய் சீனி தொழிற்சாலையின் 2000 ஏக்கர் விவசாய நிலம், சோள செய்கைக்காக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு விவசாய, கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு. கே.டி. லால்காந்த மற்றும் விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோரின் தலைமையில் நேற்று (11) கந்தளாய் சீனி தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

"ஒரு வளமான நாடு - ஒரு அழகான வாழ்க்கை" என்ற அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, நாடு முழுவதும் 22 மாவட்டங்களை உள்ளடக்கிய 117,095 ஏக்கர் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிரிடப்படாத விவசாய நிலங்களில் சாகுபடி திட்டங்கள் தொடங்கப்பட்டன.

இதன்போது அமைச்சர், விவசாயிகளின் பொருளாதாரத்திற்கு பலம் அளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று கூறினார்.

இந்நிகழ்வில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, திருகோணமலை மாவ‌ட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார மற்றும் பயனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]