இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கைகளுக்கு இணங்க 2025 பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 240,217 நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது எந்த ஒரு வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் வருகை தந்த அதிகமான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பெப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையாக 235,618 சுற்றுலா பயணிகள் 2018 ஆம் ஆண்டில் வருகை தந்தனர்.
அதன்படி 2025 ஆம் ஆண்டின் இரண்டு மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை புதுப்பிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.