ஆரோக்கிய நடமாடும் மருத்துவ முகாம் பாலிந்தநுவர கெலின்கந்த கொஸ்குலன கனிஷ்ட வித்தியாலயத்தில்

ஆரோக்கிய நடமாடும் மருத்துவ முகாம் பாலிந்தநுவர கெலின்கந்த கொஸ்குலன கனிஷ்ட வித்தியாலயத்தில்
  • :

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் Healthy Sri Lanka திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஆரோக்கிய நடமாடும் மருத்துவ முகாம் பாலிந்தநுவர கெலின்கந்த கொஸ்குலன கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் (30) நடாத்தப்பட்டது.

அங்கு கண் சிகிச்சை முகாம், மகப்பேறு சிகிச்சை முகாம், பல் சிகிச்சை முகாம், ஆயுர்வேத சிகிச்சை முகாம், நீரிழிவு சிகிச்சை முகாம், இரத்த அழுத்த பரிசோதனை, ECG பரிசோதனை, கொலஸ்ட்ரால் பரிசோதனை, கண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவ சேவைகளைப் பெற்றனர்.

அனைத்து நோய் பரிசோதனைகளுக்குப் பிறகு சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டதோடு, மேலதிக சிகிச்சை தேவைப்படும் நபர்கள் தொடர்புடைய வைத்தியசாலை கிளினிக்குகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

கண் பரிசோதனைகளுக்குப் பிறகு கண்ணாடி தேவையான நபர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் சவி லெண்ட்ஸ் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஆண்ட்ரி பெரேராவின் பூரண அனுசரணையில் விநியோகிக்கப்பட்டன.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், தேசிய மக்கள் சக்தியின் பிரதான செயலாளர் மருத்துவ நிபுணர் நிஹால் அபேசிங்க அவர்களின் தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது.

தமது அன்றாட வாழ்க்கையில் வாழ்க்கையைச் செலவிடும்போது தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்துவதில்லை என்றும், சுகாதார சேவைகளுக்கு குறைந்த அணுகல் வாய்ப்பு பெற்ற மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கெலிங்கந்த கொஸ்குலனில் வாழும் மக்களுக்கு, இந்த நடமாடும் மருத்துவ முகாம் ஒரு மிகப் பெரிய வாய்ப்பாகும் என்றும் இந்த விழாவில் தனது கருத்துக்களை தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கநாத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைக்கு ஏற்ப, செழிப்பான குடிமக்களை உருவாக்கும் செயல்முறையில், ஆரோக்கியமுள்ள சமூகத்தை உருவாக்குவதற்காக அதிக உழைப்பை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நடமாடும் மருத்துவ முகாம் அந்த திட்டத்தை வெற்றிகரமாக்கும் முக்கியமான வாய்ப்பாகவும், அதை களுத்துறை கெலின்கந்தப் பிரதேசத்திற்கு கொண்டு வர முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles