சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, சூறாவளி டிட்வாவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 6.5 மில்லியனை, சூறாவளி டிட்வாவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னில தலைமையில் அண்மையில் (29) கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கவுன்சிலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
பிரதேச செயலக மட்டத்தில் தொடர்புடைய தகவல்களை சேகரிக்க முன்மொழியப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தேசிய கொள்கையை தயாரிப்பது விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.


