சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதமர் இடையில் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதமர் இடையில் சந்திப்பு
  • :
 சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருமானத்தை திறம்பட நிர்வகித்தல் மற்றும் அரச துறை செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார பிரச்சினைகள் குறித்து இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
 
பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் நிலையான வளர்ச்சியை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட கொள்கை விடயங்கள் குறித்தும், அரசாங்கத்தின் எதிர்கால வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் குறித்தும் பிரதமர் கலந்துரையாடினார்.
 
- பிரதமர் ஊடகப் பிரிவு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]