Thu, Jul 23, 2026

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பீடி இலைகள் கல்பிட்டியில் பறிமுதல் செய்யப்பட்டன

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பீடி இலைகள் கல்பிட்டியில் பறிமுதல் செய்யப்பட்டன
  • :

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, 2026 ஜனவரி 14 ஆம் திகதி கல்பிட்டி குடாவ பகுதியில் ஒரு சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் அறுநூற்று பதினேழு (617) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற (01) கெப் வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனம், கல்பிட்டி பொலிஸாருடன் இணைந்து நடத்திய இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, கல்பிட்டி குடாவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான (01) ஒரு கெப் வண்டி சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் அறுநூற்று பதினேழு (617) கிலோகிராம் பீடி இலைகளுடன் அந்த கெப் வண்டியும் கைப்பற்றப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட கெப் வண்டி மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

Related Articles