கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்த மாவட்டக் கழிவு முகாமைத்துவ உபகுழு பாராளுமன்றத்தில் கூடியது.

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்த மாவட்டக் கழிவு முகாமைத்துவ உபகுழு பாராளுமன்றத்தில் கூடியது.
  • :

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்த மாவட்டக் கழிவு முகாமைத்துவ உபகுழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் ஜூலை 22 , பாராளுமன்றத்தில் கூடியது.

இதன்போது, முன்னைய கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட மேல் மாகாணத்தின் நகர்ப்புறத் திண்மக் கழிவுகளை அகற்றும் வசதிகள் மற்றும் திண்மக் கழிவுகளினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்காக எடுக்கப்பட்டுள்ள தற்போதைய நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் மக்களிடையே கம்போஸ்ட் குப்பைத் தொட்டிகளை உரிய முறையில் பயன்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், கழிவு முகாமைத்துவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள கொள்கைகளைச் சரிவர நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், குப்பைக் கழிவுகளைச் சரிவர அகற்றுவதற்கான பிரஜைகளின் பொறுப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான லக்ஷ்மன் நிபுணாரச்சி, மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார, மேல் மாகாணப் பிரதம செயலாளர் பிரதீப் புஷ்பகுமார, மாவட்டச் செயலக அதிகாரிகள், கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் (WMA) அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Articles