சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான, பயிர்செய்கைக்கு உட்படுத்தப்படாத நிலையில் காணப்பட்ட சிலாபம் விமல் உயன தோட்டத்தில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் 3500 TJC மாங்கன்றுகளை நட்டி, மாங்காய்ப் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்தும் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்ட்டது.
இந்த 22 ஏக்கர் நிலப்பரப்பு அடையாளம் காணப்பட்டு, நிலத்தை பதப்படுத்தும் பணிகள் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 3500 மாங்கன்றுகள் வெற்றிகரமாக பயிரிடப்பட்டுள்ளதுடன். அதற்கான நீர் விநியோக செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


