செவனகல சீனி தொழிற்சாலை மூடப்படும் அபாயம் இல்லை என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
சீனி தொழிற்சாலையின் தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக நேற்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பெல்வத்த சீனி நிறுவனம் சந்தைக்கு வெளியிடுவதற்காக வைத்திருந்த சீனி கையிருப்பைக் காட்டி சிலர் இதுபோன்ற தவறான அறிக்கைகளை வெளியிட்டதாகவும், ஆனால் இந்த நிறுவனம் 08 மாதங்களுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டபோது, 33,000 மெட்ரிக் டொன் சீனி சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அப்போது யாரும் அத்தகைய அறிக்கைகளை வெளியிடவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சந்தைக்கு வெளியிடப்பட உள்ள சீனி கையிருப்பைக் காட்டி, சமூக ஊடகங்கள் மூலம் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிலர் முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கரும்பு விவசாயிகள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழு தங்கள் அரசியல் நலன்களுக்காக தவறான பிரச்சாரத்தை பரப்பி வருவதாகவும் அவர் கூறினார்.
'இந்த நிறுவனம் வெறும் சீனி உற்பத்தி நிறுவனம் மட்டுமல்ல. கரும்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நாங்கள் நியாயமான ஊதியங்களை வழங்குகிறோம். இதனை நம்பி சுமார் 200,000 விவசாயிகளைக் கொண்ட 5,000 குடும்பங்கள் வாழ்கின்றனர் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.