"இலங்கையில் அமைதிக்கான நடைப்பயணம்" (Walk for Peace Program in Sri Lanka) நிகழ்ச்சிக்காக, பௌத பிக்குகள் குழு ஒன்று இலங்கைக்கான தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற "அமைதிக்கான நடைப்பயணம்" (Walk for Peace) நிகழ்ச்சி, 2026 ஏப்ரல் 21 முதல் 28 வரை இலங்கையில் நடைபெற உள்ளது.
இந்த நடைப்பயணத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் நோக்கத்தில், பௌத பிக்குகள் குழு ஏப்ரல் 14 முதல் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டலஸ்-போர்ட் வேர்த் (DFW) சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்து வருகின்றனர்.


