இலங்கை இராணுவப் புலனாய்வு தகவலின் அடிப்படையில், ரூ. 5.6 மில்லியன் பெறுமதியான 32 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேல் மாகாண வடக்கு கோனஹேன விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள், கொழும்பு, கெஸ்பேவ பிரதேசத்தில் 2026.04.08 ஆம் திகதி நடாத்திய சுற்றிவளைப்பின் போது ரூ. 5.6 மில்லியன் பெறுமதியான 32 கிலோகிராம் கேரளக் கஞ்சா, கார் மற்றும் மூன்று தொலைபேசிகளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.


