2025 மே மாதம் 24 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 மே 24 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் தீவின் சில இடங்களில் மழை சிறிய அளவில் பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
மத்திய மலை நாட்டின் சரிவுப் பிரதேசங்களில் மற்றும் வடக்கு, வடமத்தி, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (30-40) கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசும்.
இடியுடன் கூடிய மழை பெய்யுடன் ஏற்படக்கூடிய தற்காலிக கடும் காற்றுக் காரணமாக மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
Weather today