தென்னை உற்பத்தியுடன் தொடர்பான வெள்ளைப் பூச்சி நோய் மற்றும் தென்னை பூச்சி பாதிப்புகளை தடுப்பதற்கு தமது நாட்டில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்ப முறை மற்றும் பராமரிப்பு முறையை இலங்கையிலும் தென்னை உற்பத்தியில் வெள்ளைப் பூச்சி நோய் கட்டுப்பாட்டிற்காக வழங்க முடியும் என இந்தோனேசிய தூதுவர் தேவி கஷ்டின தோப்பின் ( Dewi Gustina Tobing) தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் அண்மையில் (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.