காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிகளை மேலும் உற்பத்தி திறன் மிக்கதாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் டபிள்யூ. ஏ. ஆர். டி மெல் மற்றும் பணிப்பாளர் நாயகம் தமயந்தி பெர்னாண்டோ ஆகியோருடன், தற்போதைய திட்டத்துடன் இணைந்ததாக காப்புறுதி துறையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அண்மையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
காப்புறுதித் துறையை நாட்டு மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் நெருக்கமானதாக மாற்றுவதனால், சரியான தகவல்களின் அடிப்படையில் சந்தைப்படுத்தலை மேம்படுத்துவதன் ஊடாக காப்புறுதிப் பயனாளிகள் மற்றும் காப்பீட்டைப் பெறுவதற்கு எதிர்பார்த்திருக்கும் நபர்களுக்குத் தெளிவு படுத்துவதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்குவதற்கு வாய்ப்புள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும சுட்டிக்காட்டினார்.