காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் மாகாண அலுவலகங்கள் மற்றும் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகம் என்பன, 2026 பெப்ரவரி 14 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை திறந்திருக்கும் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
2026 பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் நடைபெறவிருக்கும் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மட்டுமே குறித்த அலுவலகங்கள் அவ்வாறு திறந்திருக்கும். (தொடர்புடைய கடிதத்தை ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.drp.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலமும் பதிவிறக்கம் செய்யலாம்).


