கம்பஹா கல்வி வலய ஆசிரியர்களிடையே இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்தும் இலங்கை CERT

கம்பஹா கல்வி வலய ஆசிரியர்களிடையே இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்தும் இலங்கை CERT
  • :
கம்பஹா கல்வி வலய ஆசிரியர்களிடையே இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்தும் இலங்கை CERT

 இலங்கை முழுவதும் இணையப் பாதுகாப்பையும் (Cyber Safety) டிஜிட்டல் தாங்குதிறனையும் (Digital Resilience) மேம்படுத்தும் தனது தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை CERT நிறுவனம் கம்பஹா கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 160 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) ஆசிரியர்கள் மற்றும் ஆலோசனை ஆசிரியர்களுக்காக இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சி கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதுடன், உருவாகி வரும் இணைய அச்சுறுத்தல்கள் குறித்த கல்வியாளர்களின் அறிவை மேம்படுத்துவதும், மாணவர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த வழிகாட்டுவதற்குத் தேவையான திறன்களை வழங்குவதும் இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்த விழிப்புணர்வு அமர்வுகளை இலங்கை CERT நிறுவனத்தின் பிரதம தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் திரு. சாருக தமுனுபொல அவர்கள் நடத்தினார்.
மாணவர்களின் டிஜிட்டல் நடத்தை உருவாக்குவதிலும், இளைஞர்கள் இணையச் சூழலில் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் செயல்படுவதற்கான அறிவும் திறனும் பெறுவதை உறுதி செய்வதிலும் ஆசிரியர்கள் மிக முக்கியமான பங்காற்றுகின்றனர் என்பதை இலங்கை CERT இந்நிகழ்வில் வலியுறுத்தியது.
இந்நிகழ்ச்சி, நாடு முழுவதும் உள்ள சமூகங்களிடையே இணையத் தாங்குதிறனையும் டிஜிட்டல் அறிவாற்றலையும் மேம்படுத்தும் நோக்கில் இலங்கை CERT முன்னெடுத்து வரும் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்

Related Articles