கம்பஹா மாவட்டத்தை உள்ளடக்கிய விசேட கூட்டு டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்று, மாவட்ட செயலாளர் லலிந்த கமகேயின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று முன்தினம் (14) நடைபெற்றது.
மாவட்டத்தின் 1177 கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரு கிராம அலுவலர் பிரிவில் 50 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டு, குடியிருப்பாளர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.
அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 60,000 வீட்டு அலகுகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.