தனியார் பல்கலைக்கழகங்களின் கல்விமாணி பட்டதாரிகளின் தரம் குறித்து மீண்டும் மீளாய்வு செய்யப்படும்- கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், கலாநிதி ஹரிணி அமரசூரிய

தனியார் பல்கலைக்கழகங்களின் கல்விமாணி பட்டதாரிகளின் தரம் குறித்து மீண்டும் மீளாய்வு செய்யப்படும்- கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், கலாநிதி ஹரிணி அமரசூரிய
  • :

தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுகின்ற கல்விமாணி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளும்போது,

அவர்கள் பெற்ற பட்டத்தின் தரம் பற்றி சிக்கலான சூழ்நிலை தோன்றியுள்ளதாக இதுவரையில் தெரியவந்துள்ளதாகவும், இதுகுறித்து கல்வி அமைச்சின் மட்டத்தில் மீளாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2025.06.14 ஆம் திகதி ஆசிரியர் - அதிபரி சங்க கூட்டணியின் பிரதிநிதிகளுடன் இசுருபாய, கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 சமீபத்தில் வழங்கப்பட்ட கல்விமாணி பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அங்கீகரிக்கப்பட்ட நியமனங்கள் என்றும், அந்த நியமனங்கள்  ஆசிரியர் சேவை பிரமான குறிப்பிற்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளதென்றும், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கூட்டிணைக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களின் கல்விமாணி பட்டத்தின் தரத்தை மீண்டும் மீளாய்வு செய்வதற்கு கல்வி அமைச்சின் மட்டத்தில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மீளாய்வு செயற்பாடுகளுக்கு இணங்க, எதிர்காலத்தில் இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள கல்விமாணி பட்டதாரிகளின் தரம் பற்றி கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் ஆசிரியர் - அதிபர் பிரதிநிதிகளின் சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்தார். 

இந்தக் கலந்துரையாடலில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கல்வி அமைச்சின் பதில் செயலாளர் அமல் எதிரிசூரிய உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]