தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.5,000/= பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று (16) முதல்ஆரம்பமாகும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் ஆரம்ப விழா இன்று காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.


