கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நேற்று இரவு (08) நடாத்தப்பட்ட சோதனையில் 2.762 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் 27 வயது இந்தியர் என்றும் இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
கட்டநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இந்த சோதனை நடாத்தப்பட்டதுடன் அந்தப் பிரிவு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


