இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் தற்போதுள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இலங்கை வர்த்தக சபை மற்றும் டாக்கா வர்த்தக மற்றும் தொழில்துறை சபை இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை - பங்காளதேஷ் உயர்மட்ட வணிக மற்றும் முதலீடு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (17) கொழும்பில் நடைபெற்றது.
இந்த வணிக மற்றும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்பதற்காக வேண்டி, ஆட்டோமொபைல்கள், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம், பொதியிடல்;, மருந்துகள், நிதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பல தொழில் துறைகளை பிரதிநிதித்தி பங்களாதேஷில் உள்ள 22 உயர்மட்ட நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் குழு பங்களாதேஷிலிருந்து வருகை தந்திருந்தனர்.
அதே நேரத்தில் இலங்கையில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 உயர்மட்ட நிறுவனங்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றன. இந்த வணிக மற்றும் முதலீட்டாளர் சந்திப்பு, இலங்கை மற்றும் பங்களாதேஷ் நிறுவனங்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட ஒரு தளத்தை வழங்கும்.