கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற வர்ண விருது விழாவின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது இச்சம்பவம் குறித்து அதிபரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.


