இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற, கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்; சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர், ஜனித ருவன் கொடிதுவக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இங்கு விநியோக நடவடிக்கைகளை தானியக்கமாக மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதுடன், ஆரம்பத்தில் அரை தானியக்கத்தின் மூலம் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்தை பொருளாதார மையமாக மாற்றும் திட்டத்தில் முக்கிய திட்டமாக இருக்கும் கிழக்கு முனையம், விரைவில் செயல்பாடுகளைத் தொடங்கும் வகையில், கட்டுமானப் பணிகளை திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.