கொத்மலை கிழக்கு அனர்த்த நிவாரண செயற்பாடுகளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்காணிக்கும் விஜயத்தில் ஈடுபட்டார்

கொத்மலை கிழக்கு அனர்த்த நிவாரண செயற்பாடுகளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்காணிக்கும் விஜயத்தில் ஈடுபட்டார்
  • :

அனர்த்தத்திற்கு உள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் உட்பட மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளையும் கொத்துமலை கிழக்கு பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனர்த்த செயற்பாட்டு நிலையத்தின் பணிகளை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகம் மற்றும் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாக்க கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.

இங்கு, பிரதேசத்தில் நிவாரணப் பணிகள் மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வழிகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் விளக்கினார்.
கொத்மலை கிழக்குப் பிரிவில் இடம்பெயர்ந்த மக்களின் நலன்புரி குறித்து அமைச்சர் விசாரித்ததுடன், சேதமடைந்த சாலை வலையமைப்பின் புனரமைப்புப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

Related Articles