2023-2025 ஆம் ஆண்டுக்கான உலக உணவுத் திட்டத்தின் (WFP) கீழ், உள்ளூர் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டுத் தோட்டக் கலை பயனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (29) மாத்தளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு மாத்தளை மாவட்டச் செயலாளர் எல். பி. மதநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
தன்னிறைவு பெற்ற தோட்டம் மூலம் குடும்பத்தின் ஊட்டச்சத்தை வழங்குவதும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.


