மத்திய மலை நாட்டை சீரமைப்பதற்காக மலை நாட்டின் சகல நிறுவனங்களையும் ஒன்றிணைத்து புதிய அதிகார சபை நிறுவப்படும்

  • :
“திட்வா” புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிற தரப்பினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் காணும் நோக்கில் கண்டி மற்றும் கம்பளை பகுதிகளில் நேற்று (26) கண்காணிப்பு பயணமொன்று மேற்கொள்ளப்பட்டது.

 “Rebuilding Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் இக்கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் இணைந்துக் கொண்டனர்.

 
மேல் கலஹா மற்றும் கெலிஓயா ஆகிய பகுதிகளில் அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்குத் தேவையான நிலங்களை ஒதுக்குதல் மற்றும் அனர்த்த நிவாரணங்களை முறையாக வழங்குதல் உள்ளிட்ட அனர்த்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இங்கு அவதானிக்கப்பட்டன.
கெலிஓயா பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புகளும், கலஹா மேல் பகுதியில் தோட்டப் புற மக்களின் குடியிருப்புகளும் இதன் போது கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
 
இதன் போது அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அனர்த்த நிவாரணங்கள் உரிய முறையில் பொதுமக்களுக்கு சென்றடைகின்றனவா என்பது குறித்து செயலணியின் பிரதிநிதிகள் கேட்டறிந்துக் கொண்டனர்.
 
பொதுமக்கள் இது தொடர்பில் முன்வைக்கின்ற பிரச்சினைகள் மற்றும் சிரமங்கள் தொடர்பில் செவிசாய்த்து விடயங்களை கேட்டறிந்து கொண்டதுடன், இச் செயன்முறையில் கீழ் மட்டத்தில் ஏற்படுகின்ற பிரயோக பிரச்சினைகளை இணங்கண்டு, குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதே இப்பயணத்தின் நோக்கமாக இருந்தது.
 
அதேபோன்று, இவ்வனர்த்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துகின்ற உரிய அரச அதிகாரிகள் உட்பட ஏனைய தொடர்புடைய தரப்பினரை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இதன் போது கேட்டறிந்து கொள்ளப்பட்டது.
 
இந்த கண்காணிப்பு பயணத்திற்கு பொதுமக்களிடமிருந்து மிக உயர்ந்த வரவேற்பு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றும் நாளையும் (27, 28) பதுளை பகுதியில் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறைகள் குறித்து இந்தக் குழு கண்காணிக்க உள்ளது.
 
இதன் போது பிரதேசத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரணம் பெற்று வருகின்ற பொதுக்கள் மற்றும் ஊவா மாகாண சபையின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், பதுளை மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் ஏனைய பிரதேச செயலக அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.
 
இந்த பணியில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் உரிய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 
“Rebuilding Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி செயலணி சார்பாக பெப்ரல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி அவர்கள், திருமதி சமந்தா டி சில்வா அவர்கள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் இக்கண்காணிப்பு பயணத்தில் இணைந்துக் கொண்டனர்.
 
“Rebuilding Sri Lanka” தேசிய திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 08 முக்கிய குழுக்களுக்கு, இத்தகைய கண்காணிப்பு பயணங்கள் மூலம் பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், அனர்த்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மிகவும் திறம்பட செயல்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகளை உருவாக்குவதற்கான புதிய பரிந்துரைகளை வழங்குவதே இந்தப் பணியின் முதன்மை நோக்கமாகும்.

Related Articles