இலங்கையின் தோட்டத்துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் எதிர்கொள்ளும் வீடு மற்றும் கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிலை பெறான தீர்வு ஒன்றை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் "இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காவது கட்டம்" தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (26) දින வீடமைப்பு, நிருமாணம் மற்றும் நீர் விநியோக அமைச்சர் வைத்தியர் எச் எம் சுசில் ரணசிங்க மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்றது
2025 ஆம் ஆண்டில் 2,026 பயனாளிகளுக்காக வெற்றிகரமாக வீட்டு உரிமை வழங்குவதற்கு முடிந்தவுடன் 2026 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை மற்றும் பயனாளிகளை தெரிவு செய்வதற்காக உரிய காலப் பகுதியுடனான திட்டம் மற்றும் அச்செய்பாடு தொடர்பான ஆரம்பக் கலந்துரையாடல் இதன் போது நடைபெற்றது.
இலங்கையின் பெருந்தோட்ட சமூகம் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக மற்றும் தங்குமிட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்குவதுடன், அவர்களுக்கு பாதுகாப்பான வீடு மற்றும் சிறந்த புதிய வாழ்க்கைக்குள் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதே தமது அமைச்சின் ஒருங்கிணைந்த நோக்கம் என்றும் இரு அமைச்சர்களும் இதன் போது சுட்டிக்காட்டினர்.
இந்நிகழ்வில் வீடமைப்பு, நிருமாண, மற்றும் நீர் விநியோக அமைச்சு மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் உட்பட அமைச்சு அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்


