நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
2025 மே மாதம் 25 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.
2025 மே மாதம் 25 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 கி.மீ வரையிலான வேகத்தில் ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய, மேல் தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அல்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.