தாதியர் சேவை வரலாற்றில் முதல் தடவையாக 3,147 பேருக்கு இன்று (24) அலரி மாளிகையில் வைத்து நியமனங்கள் வழங்கப்பட்டன
நாட்டின் தாதியர் சேவை வரலாற்றில் பாரிய எண்ணிக்கையானவர்களுக்கு ஒரே தடவையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதனை முன்னிட்டு தாதியர் சேவையின் 79 விசேட தர தாதிய உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டன.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் பங்குவற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அணில் ஜாசிங்க உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.